பெங்களூர்: பட்டப்பகலில் பெண்ணை மானபங்கப்படுத்திய ஆட்டோ டிரைவர்கள்
பெங்களூர்: மீட்டர் அதிவேகமாக ஓடுவதை தட்டிக்கேட்ட பெண்ணை ஆட்டோ டிரைவர்கள் ஒன்று சேர்ந்து உடைகளையும் கிழித்து, மானபங்கப்படுத்தி, பட்டப்பகலில் நடுவீதியில் வெறித்தனம் செய்த கொடுர சம்பவம் பெங்களூரில் நடந்துள்ளது.
பெங்களூர் ஓல்ட் மெட்ராஸ் ரோட்டில் இருந்து சனிக்கிழமை காலை 33 வயது பெண்மணி ஒருவர் ஒரு ஆட்டோவில் ஏறியுள்ளார். பொதுவாக இரண்டு கி.மீட்டர் கடந்த பின்னரே ஆட்டோவின் மீட்டரில் குறைந்தப்பட்ச கட்டணம் ரூ.14ல் இருந்து மாறும்.
ஆனால், ஆட்டோ கிளம்பியவுடனேயே மீட்டரில் கட்டணம் கிடுகிடுவென மாறியது. இதனால் அதிருப்தியடைந்த அப்பெண் ஆட்டோவை நிறுத்தச் சொல்லி கீழே இறங்கினார்.
குறைந்தபட்ச கட்டணமாக 15 ரூபாய் தான் தரமுடியும் எனக் கூறியுள்ளார். ஆனால் ஆட்டோ டிரைவர் 50 ரூபாய் கேட்டார். தர முடியாது எனக் கூறிய அப்பெண், 15 ரூபாயை கொடுத்துவிட்டு வேகமாக நடக்கத் தொடங்கினார்.
பின்னாலேயே வந்த ஆட்டோ டிரைவர் அப்பெண்ணிடம் வம்பு செய்துள்ளார். அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்களும் ஒன்றாக சேர்ந்து கொண்டு அப்பெண்ணிடம் வம்பு செய்துள்ளனர்.
ஒருகட்டத்தில் அப்பெண்ணை பலவந்தமாக இடித்தும், தாக்கியும், உடைகளை கிழித்தும் பானபங்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
பகல் 11 மணிக்கு நடுவீதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் இருந்து எப்படியோ தப்பி வந்த அப்பெண் அருகில் இருந்த போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றுள்ளார்.
ஆனால் இதை கண்டுகொள்ளாத போலீசார் புகாரையும் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் மனமுடைந்த பெண், போலீஸ் கமிஷனர் ஷங்கர் பிதரியிடம் புகார் தெரிவித்தார்.
கமிஷனரின் நேரடி உத்தரவுக்கு பின்னர் அப்பெண்ணின் புகார் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications