கேரளா செல்லும் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் - சோதனை
சென்னை: கேரளா செல்லும் ரயில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அனைத்து கேரளா செல்லும் ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
கேரள நுண்ணறிவு பிரிவு போலீஸ் எஸ்.பிக்கு நேற்று முன்தினம் இரவு ஒரு மிரட்டல் கடிதம் வந்ததது. அந்த கடிதத்தில் கோவை வழியாக கேரளா செல்லும் ரெயில்களில் குண்டுகள் வெடிக்கும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து, ரயில்வே போலீசார், பாதுகாப்பு படை போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து செல்லும் அனைத்து ரயில்களும் கேரள எல்லையில் நள்ளிரவில் நிறுத்தப்பட்டு கடும் சோதனை செய்யப்பட்டன.
மேலும், சென்னை, கோவை, ஈரோடு, சேலம், நெல்லை உள்பட தமிழகம் முழுவதில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் போலீசார் விடிய, விடிய சோதனை நடத்தினார்கள்.
ஆனால், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. வெறும் புரளி என்று தெரியவந்தது.
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் கடிதத்தை விடுத்தவர் குறித்து விசாரணை நடந்தது. இதில், கேரளாவை சேர்ந்த முகமது யூசுப் என்பவர்தான் கடிதத்தை அனுப்பியது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
இந்த மிரட்டல் மற்றும் சோதனையால் ரயில் நிலையங்களில் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications