டெல்லி: சகஜநிலைக்கு திரும்பிய விமான சேவை- ரயில் சேவை பாதிப்பு
டெல்லி: டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான போக்குவரத்து இன்று சகஜநிலைக்கு திரும்பியுள்ளது. விமானங்கள் வழக்கம் போல இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக நேற்று முன்தினம் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை பனிமூட்டம் காரணமாக நிறுத்தப்பட்டன.
மேலும், ஓடுதளத்தில் பனிப்பொழிவை அளக்கும் கருவிகள் பழுதடைந்ததால் சில தொழில்நுட்பக் கோளாறுகளும் ஏற்பட்டன. இதனால், 200க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் வெளநாட்டு விமானங்களின் போக்குவரத்து தடைபட்டது.
சனிக்கிழமையன்று ஓடுதளப் பாதை 200 மீட்டருக்கு அப்பால் கண்ணுக்கு புலப்படாத ஆளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. நேற்று நிலைமை சற்று சீரானது. சுமார் 1,500 முதல் 2,000 மீட்டர் தொலைவு வரை காட்சி தெளிவாக இருந்தது.
இதனால் நேற்று சில விமானங்களைத் தவிர மற்ற விமானங்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. நேற்று காஷ்மீர் பகுதிகளுக்கு செல்லவேண்டிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சில விமானங்கள் தாமதமாக புறப்பட்டன.
டெல்லி வழியாக வரவேண்டிய 18 விமானங்கள் வெவ்வேறு மார்க்கமாக திருப்பிவிடப்பட்டன. இந்நிலையில் இன்று ஓடுதளத்தில் பனிப்பொழிவு குறைந்து 2000 மீட்டர் வரை தெளிவாக காட்சிகள் தெரியும் நிலையில் உள்ளது.
இதனால் அனைத்து விமானங்களும் வழக்கம் போல இயக்கப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் சேவை தொடர்ந்து பாதிப்பு:
ஆனால், கடும் பனி்மூட்டம் காரணமாக வட மாநிலங்களில் ரயில் சேவை இன்றும் பாதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து இஸ்லாம்பூர் செல்லும் மாகத் எக்ஸ்பிரஸ், தார்பங்கா செல்லும் ஸ்வதந்திர சேனை எக்ஸ்பிரஸ், டெல்லி-அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ், கால்கா மெயில் ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும் 12க்கும் மேற்பட்ட ரயில்கள் டெல்லிக்கு தாமதாக வந்துசேரும் என்றும் வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
உத்தரப்பிரதேசத்திலும் பல்வேறு இடங்களில் பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ரயில்வே வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
காசி விஷ்வநாத் எக்ஸ்பிரஸ், போபால் சதாப்தி எக்ஸ்பிரஸ், கௌஹாத்தி, மதாநந்தா எக்ஸ்பிரஸ் ஆகியவையும் திட்டமிட்ட நேரத்துக்கு மாறாக இயக்கப்படுகின்றன.
டெல்லியில் இன்று காலை 10 மணிக்குள்ளாக 12க்கும் மேற்பட்ட ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு 10 மணிநேரம் வரை தாமதமானது.
-
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை












Click it and Unblock the Notifications