மும்பை: இன்று காலை 9 மணிக்கே துவங்கியது இந்தியப் பங்குச் சந்தை.
Subscribe to Oneindia Tamil

டிசம்பர் 18ம் தேதி முதல் காலை 9 மணிக்கு வர்த்தக நேரம் மாற்றப்படுவதாக இருந்தது. ஆனால், இதற்கு புரோக்கர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் செபி அமைப்பிற்கு கடிதம் அனுப்ப போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதனால், வர்த்தக நேரம் மாற்றம் ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
இந்நிலையில், இந்திய பங்குச் சந்தை, 2010ம் ஆண்டின் முதல் பங்கு வர்த்தக நாளான ஜனவரி 4ம் தேதி காலை 9மணிக்கே தொடங்கியது.
துவக்கமே பசுமையாக அமைந்தது. காலை 10 மணி நிலவரப்படி 47 புள்ளிகள் உயர்ந்திருந்த சென்செக்ஸ் குறியீட்டெண் 17512 புள்ளிகளைக் காட்டியது.
நிப்டி 18 புள்ளிகள் உயர்ந்திருந்தது.












Click it and Unblock the Notifications