ஆர்எம்கேவி ஜவுளிக்கடை உரிமையாளர் மரணம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: பிரபல ஆர்.எம்.கே.வி ஜவுளிக்கடைகள் உரிமையாளர்களில் ஒருவரான பொன் ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 43.
85 ஆண்டுகளாக பட்டு ஜவுளி விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆர்.எம்.கே.வி நிறுவனத்துக்கு சென்னை உஸ்மான் ரோடு, திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் கடைகள் உள்ளன.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சொந்தமாக பட்டு நெசவுக் கூடங்கள் வைத்து நடத்தி வருகிறார்கள்.
இந்நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான பொன் ஆனந்த்துக்கு இன்று காலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பாளையங்கோட்டையில் உள்ள அவரின் வீட்டில் இருந்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்துவிட்டதாக அவரின் உறவினர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications