வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு-பாமக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

G K Mani
சென்னை: வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும், அதற்காக தமிழகத்தில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சட்டசபையில் பாமக கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் பேசிய அக் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி,

அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக நீதி கிடைக்கும் வகையில் இந்த அரசு செயல்பட வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருப்பது போல தொகுப்பு முறையில் இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும்.

இஸ்லாமியர், அருந்ததியருக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது போல வன்னியர்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பல்வேறு ஜாதி சங்கங்களின் கோரிக்கைகளை ஏற்று ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த முன் வர வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குறிச்சன், குடும்பன் என்ற இனத்தவருக்கு பழங்குடி மக்களுக்கான சான்றிதழ் வழங்க வேண்டும்.

மாநில சுயாட்சி பெறுவதற்கும் மாநிலத்திற்கு கூடுதல் அதிகாரங்களை பெறுவதற்கும் தமிழக அரசு என்ன முயற்சி மேற்கொண்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த ஆண்டை விட மூன்று மடங்கு உயர்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். விலைவாசியை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

ராமநாதபுரம் குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்றியது போல, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தையும் விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

ஆளுநர் உரையில் தமிழக வளர்ச்சிக்கோ, மக்களின் வளர்ச்சிக்கோ ஏதும் சொல்லப்படவில்லை என்றார் மணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+