கடும்பனி: டெல்லி விமான சேவை பாதிப்பு

சுமார் 25 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் பெரும் அசௌகரியத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
நேற்று இரவு முதலே ஓடுதளத்தில் பனிமூட்டம் கடுமையாக இருந்ததால் விமானங்கள் தரையிறங்க முடியாமலும், குறித்த நேரத்துக்கு புறப்பட இயலாமலும் போனது.
சுமார் 125 மீட்டருக்கு அப்பால் உள்ளவை கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு பனி படர்ந்திருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை பனிப்பொழிவு மேலும் அதிகரித்து காலை 6 மணியளவிலும் கூட ஓடுதளத்தில் காட்சித் தெளிவு 50 முதல் 75 மீட்டர் வரை மட்டுவே இருந்தது.
இதன் காரணமாக 12 உள்நாட்டு விமானங்கள், 11 வெளிநாட்டு விமானங்களின் போக்குவரத்தில் 2 முதல் 3 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது.
இரண்டு வெளிநாட்டு விமானங்கள் திட்டமிட்டபடி புறப்படவில்லை. அபுதாபியில் இருந்து டெல்லி வந்த விமானம் வேறு மார்க்கத்தில் திருப்பப்பட்டது.












Click it and Unblock the Notifications