15 மாதங்களில் முதல் முறையாக லாபம் கண்ட ரிலையன்ஸ்!
மும்பை: கிட்டத்தட்ட 5 காலாண்டுகள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முதல் முறையாக இந்த காலாண்டில் லாபம் பார்த்துள்ளது.
அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் ரிலையன்ஸுக்கு 16 சதவிகித லாபம் அதாவது ரூ 4008 கோடி கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ 3,462 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த உற்பத்தி இந்த 3 மாதங்களில் மட்டும் 93 சதவிகிதம் உயர்ந்து ரூ 58,848 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் பங்குகள் மூலம் கிடைத்த வருவாய் இதில் சேர்க்கப்படவில்லை.
ஆனால் கடந்த மூன்று காலாண்டுகளிலும் சேர்த்து அதாவது 9 மாதங்களின் நிகர லாபம் என்று பார்த்தால் அதில் லேசான வீழ்ச்சியையே காட்டுகிறது. கடந்த நிதியாண்டில் 9 மாதங்களில் ரூ 11682 கோடியாக இருந்த நிகர லாபம், இந்த ஆண்டு 11526 கோடியாக குறைந்துள்ளது.
எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் இந்த நிறுவனத்துக்கு கிடைத்த வரும் வருவாய் இந்த காலாண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications