தமிழ்நாடு வக்கீல்கள் சங்கத் தலைவருக்கு கொலை மிரட்டல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட வக்கீல்கள் சங்கத் தலைவர் எஸ்.பிரபாகரனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனை சந்தித்து அவர் புகார் மனு கொடுத்தார்.

அவருடன் பெரும் திரளான வக்கீல்களும் ஆணையர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பிரபாகரன் பேசுகையில்,

புதன்கிழமை இரவு 8 மணி அளவில் எனது செல்போனில் பேசிய மர்ம நபர் ஒருவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசினார்.

மதுரவாயல் நில பிரச்சினை தொடர்பான வழக்கில் இருந்து விலகாவிட்டால் உன்னை குடும்பத்தோடு கொலை செய்துவிடுவோம் என்றும், இதற்காக மதுரையில் இருந்து நாங்கள் வந்திருக்கிறோம் என்றும் அந்த மர்ம நபர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தேன். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் கமிஷனர் தெரிவித்தார்.

இதுபோன்ற புகார் மனுவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் கொடுத்துள்ளேன். போலீஸ் டி.ஜி.பி.க்கும் புகார் மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவராக முன்பு இருந்தவர் பிரபாகரன்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்களுக்கும், போலீஸாருக்கும் இடையில் நடந்த கடும் மோதலுக்குப் பின்னர் வக்கீல்கள் சங்க முக்கிய நிர்வாகி ஒருவர் ஆணையர் அலுவலகம் வந்தது இதுவே முதல் முறை என்பதால் ஒரு விதமான இறுக்க நிலை காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+