ருசிகா வழக்கு - மாஜி டிஜிபி ரத்தோருக்கு சரமாரி குத்து

பன்ச்குலாவில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் இன்று ருசிகா வழக்கு தொடர்பான ரகசிய விசாரணை நடைபெற்றது. இதற்காக ரத்தோர் தனது வக்கீலும், மனைவியுமான அபாவுடன் வந்திருந்தார்.
வழக்கை முடித்து விட்டு அவர் வெளியே வந்தபோது திடீரென ஒருவர் பாய்ந்து வந்தார். அவரது கையில் கத்தி இருந்தது. ரத்தோரை நெருங்கிய அந்த நபர், ரத்தோரின் முகத்தில் மூன்று முறை பலமாக குத்தினார்.
இதில் நிலை குலைந்தார் ரத்தோர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விரைந்து வந்த போலீஸார் அந்த நபரைப் பிடித்து விலக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி அழைத்துச் சென்றனர். ரத்தோர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் உத்சவ் சர்மா என்று தெரிய வந்துள்ளது. அவர் சண்டிகரில் உள்ள தேசிய வடிவைப்புக் கழகத்தில் முதுநிலை டிப்ளமோ படித்து வருகிறார்.
இதுகுறித்து அக்கழகத்தின் இயக்குநர் பிரத்யுமா வியாஸ் கூறுகையில், இங்கு படிக்கும் மாணவர்கள் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கழகம் நடவடிக்கை எடுக்கும். அதன் அடிப்படையில், உத்சவ் சர்மா மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கழகத்தின் செய்தித் தொடர்பாளர் சமீர் மோரே கூறுகையில், உத்சவ் சர்மா இங்கு அனிமேஷன் மற்றும் திரைப்பட வடிவமைப்பு தொடர்பான முதுநிலை டிப்ளமோ படித்து வருகிறார். 2 ஆண்டுகளை அவர் முடித்துள்ளார். இருப்பினும் இன்னும் அவர் இன்டர்ஷிப்பை முடிக்காததால், அவருக்கு டிப்ளமோ தரப்படவில்லை.
சர்மாவின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications