பிரபல ரவுடி திண்டுக்கல் பாண்டி, கூட்டாளி என்கவுன்டரில் கொலை
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் பாண்டி பிரபல ரவுடி. கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவன். போலீஸாரால் தேடப்பட்டு வந்தான்.
இந்த நிலையில் தனது கூட்டாளியான கூடுவாஞ்சேரி வேலு என்பவனுடன், சென்னை அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில் பனையூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். போலீஸாரைப் பார்த்த இரு ரவுடிகளும் போலீஸாரைத் தாக்கி விட்டுத் தப்ப முயன்றனராம்.
இதையடுத்து தற்காப்புக்காக போலீஸார் இருவரையும் சுட்டதாக கூறப்படுகிறது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications