தமிழகத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் புனேவில் படுகொலை- உடல் எரிப்பு

அவரைக் கொலை செய்ததாக 3 பேரை புனே போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணியாற்றி வந்தார்.
இவரது அழுகிய உடல் கடந்த மாதம் 23ம் தேதி போலீஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. தலையில் கல்லால் நசுக்கி கொடூரமாகக் கொலை செய்த பின்னர் உடலை எரித்துள்ளனர்.
இந்த உடல் யாருடையது என்று தெரியாமல் போலீஸார் திணறி வந்தனர். இந்த நிலையில் ராமச்சந்திரனின் டெபிட் கார்டை ஒரு ஷாப்பிங் மையத்தில் பயன்படுத்திய 3 பேரை போலீஸார் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த மூன்று பேரும்தான் ராமச்சந்திரனைக் கொன்றது எனத் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த மூன்று பேரும் ராமச்சந்திரனுடன் பணியாற்றியவர்கள் என்று தெரிகிறது. சம்பவ நாளன்று ஒரு பாருக்கு நான்கு பேரும் போயுள்ளனர். அப்போது அவர்களுக்குள் மோதல் மூண்டுள்ளது.
இதையடுத்து கத்ராஜ் காட் என்ற இடத்திற்கு ராமச்சந்திரனை அழைத்துச் சென்ற அந்த மூன்று பேரும் அங்கு வைத்து அவரைத் தாக்கினர். பின்னர் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்தனர். அதன் பின்னர் உடலுக்குத் தீவைத்து விட்டுத் தப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications