சென்னை சிறைக்கு மாற்றக் கோரி கைதி 7 நாட்களாக தொடர் உண்ணாவிரதம்
மதுரை: விருதுநகரில் மோசடியில் ஈடுபட்டதாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த சேகர் என்ற கைதி தொடர்ந்து 7 வது நாளாக விருதுநகர் சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்.
சென்னை சொக்கநாதன் பேட்டையை சேர்ந்தவர் சேகர் (61). இவரை மோசடி வழக்கு ஒன்றிற்காக போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து கைதி சேகரை கடந்த 14 ம் தேதி விருதுநகர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விருதுநகர் கிளை சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் சிறையில் இருக்க தனக்கு பிடிக்கவில்லை என்றும், இதனால் தன்னை புழல் சிறையிலேயே அடைக்க வேண்டும் என்று கூறி கடந்த 14 ம் தேதி கைதி சேகர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். இதனால் அவரது உடல் நிலை மோசமானது.
இதனையடுத்து அவரை விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைச்சாக சேர்த்தனர். அங்கும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
இதை தொடர்ந்து அவரை மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சேர்த்தனர். ஆனாலும் தனது உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார் சேகர்.












Click it and Unblock the Notifications