கேரள ஆர்.எஸ்.எஸ். மாநாட்டு அலுவலகத்தைத் திறந்து வைத்த சிபிஎம் தலைவர்
கொல்லம்: கேரளாவில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் திறந்து வைத்தார். இதனால் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் சிபிஎம் மூத்த தலைவர்களுள் ஓருவராக இருப்பவர் பத்மலோசனன். கொல்லம் மாநகர மேயராகவும் இருக்கிறார். கொல்லத்தில் நாளை மறுதினம் ஆர்எஸ்எஸ் மாநில கூட்டம் நடைபெறுகிறது.
ஒரு லட்சம் தொண்டர்கள் பங்கேற்ற உள்ள இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச உள்ளார். அவருடைய வருகையை முன்னிட்டு கொல்லத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விழாவில் இந்த அலுவலகத்தை பத்மலோசனன் திறந்து வைத்தார். அப்போது ஆர்எஸ்எஸ் முன்னோடி தலைவர்களான ஹெக்டேவர், கொல்வால்கர் ஆகியோரின் புகைப்படங்கள் முன்பாக வந்து குத்து விளக்கேற்றினார்.
ஆர்எஸ்எஸ் இயக்கதை சிபிஎம் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் இப்படி செய்தது கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
கட்சி கட்டுபாட்டை மீறி விட்டதாக பத்மலோசனன் மீது கட்சி தலைமையிடம் மாவட்ட நிர்வாகிகள் புகார் செய்துள்ளனர்.
இந்த விவகாரம் கேரள அரசியல் வட்டாரத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications