நாடாளுமன்ற வளாகத்தில் தெலுங்கானா வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்- டெல்லி போலீஸை ஏமாற்றி நுழைந்தனர்
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி நாடாளுமன்றத்திற்கு வெகு அருகே சென்று தெலுங்கானா பகுதி வக்கீல்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி போலீஸாரின் தீவிர கண்காணிப்பை மீறி, கருப்புக் கோட்டை கழற்றியபடி உள்ளே நுழைந்து பின்னர் கோட்டை மாட்டிக் கொண்டு அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பாகி விட்டது.
தெலுங்கானா பிராந்தியத்தில் உள்ள 10 மாவட்டங்களின் வக்கீல்கள் சங்கத்திலிருந்தும் ஏராளமான பிரதநிதிகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
முதலில் அனுமதிக்கப்பட்ட ஜந்தர் மந்தர் பகுதியில் அவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் வக்கீல் உடையை களைந்து விட்டு சாதாரண உடையில் தனித் தனி குழுவாக பிரிந்து நாடாளுமன்ற வளாகத்திற்குள் புகுந்தனர்.
நாடாளுமன்றத்தை நெருங்கியதும் மீண்டும் கருப்புக் கோட்டை மாட்டிக் கொண்டு முழக்கமிட்டபடி நாடாளுமன்ற அனெக்ஸ் கட்டடத்தை நோக்கி சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களை வக்கீல்கள் ஏமாற்றி உள்ளே புகுந்து விட்டதை உணர்ந்து கொண்டு சுதாரித்த டெல்லி போலீஸார் விரைந்து சென்றனர். நாடாளுமன்றத்தின் நுழைவாயிலுக்கு 100 மீட்டர் தொலைவில் வக்கீ்ல்களை தடுத்து நிறுத்தினர்.
இருப்பினும் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அங்கு நின்றபடி ஆர்ப்பாட்டம் செய்தனர் வக்கீல்கள். இதையடுத்து மூத்த போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி அமைதியான முறையி்ல் கலைந்து போகச் செய்தனர்.












Click it and Unblock the Notifications