தூத்துக்குடியில் முதல் தனியார் கண்டெய்னர் கப்பல் சேவை!

இந்தக் கப்பல் ரூ.25 கோடி மதிப்பிலான 585 கன்டெய்னர் ஏற்றும் திறன் கொண்டதாகும். தூத்துக்குடி-துபாய்-முந்த்ரா-கொச்சி மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.
இதன் சேவையை தூத்துக்குடி துறைமுக பொறுப்பு கழக தலைவர் ஜிஜே ராவ் துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறுகையில், "தூத்துக்குடி துறைமுகம் கடந்த ஆண்டு 22 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. வரும் ஆண்டில் 23 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் சில ஆண்டுகளில் 100 மில்லியன் டன் சரக்குகளை கையாளும் வகையில் துறைமுகம் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். அதற்கு இது போன்ற சரக்கு கப்பல் சேவை முக்கிய பங்கு வகிக்கும். தூத்துக்குடி துறைமுகதில் மிகப்பெரிய கப்பல்கள் வந்து செல்லும் பகுதியில் தற்போதுள்ள 10.7 மீட்டர் ஆழத்தை 12.8 மீட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்காக ரூ.538 கோடி ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆழப்படுத்தும் வேலைகள் மே மாதத்தில் தொடங்கும். மேலும் 2வது கண்டெய்னர் தளம் அமைக்கும் பணியும் ரூ.312 கோடியில் விரைவில் துவங்க உள்ளது", என்றார்.












Click it and Unblock the Notifications