நாங்கள் அதிமுக எம்எல்ஏக்களாகத் தான் உள்ளோம்: சபாநாயகரிடம் விளக்கம்
சென்னை: கட்சித்தாவல் சட்டப்படி பதவி நீக்கம் செய்யுமாறு அதிமுகவால் கோரப்பட்ட இரு எம்எல்ஏக்களும் இன்று சபாநாயகர் ஆவுடையப்பனை நேரில் சந்தித்து விளக்கக் கடிதம் அளித்தனர்.
அதிமுக எம்எல்ஏக்களான ஜெயங்கொண்டம் ராஜேந்திரன், கோவில்பட்டி ராதாகிருஷ்ணன் ஆகியோர் சமீபத்தில் நடந்த திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதையடுத்து 2 எம்எல்ஏக்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி 51 அதிமுக எம்எல்ஏக்களும் நேற்று சட்டமன்ற செயலாளர் செல்வராஜை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.
இந் நிலையில் இன்று ராஜேந்திரன், ராதாகிருஷ்ணன் இருவரும் சபாநாயகரை நேரில் சந்தித்து விளக்கக் கடிதம் அளித்தனர்.
அதில், நாங்கள் அதிமுக எம்எல்ஏக்களாகத் தான் உள்ளோம். அதிமுகவில் தொடரவே விரும்புகிறோம். உட்கட்சிப் பூசல் காரணமாகவே எங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.
இது குறித்து சபாநாயகர் ஆவுடையப்பன் கூறுகையில், கோவில்பட்டி எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராஜேந்திரன் ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை மீறி விட்டதாகவும், அவர்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.தி.மு.க. சட்டமன்ற கொறடா செங்கோட்டையன் என்னிடம் மனு கொடுத்தார்.
இதையடுத்து, 2 எம்எல்ஏக்களும் 8ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதை ஏற்று எம்.எல்.ஏக்கள், ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் இன்று விளக்க மனுக்களை என்னிடம் கொடுத்துள்ளனர்.
அதில் 2 பேரும் அதிமுகவில் நீடிப்பதாகவும், கட்சியில் உள்ள கோஷ்டி பூசல் காரணமாக தங்களைப் பற்றி மனு கொடுத்து இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அமைச்சர்களை நேரில் சந்தித்து தொகுதி பற்றிய குறைகளை கூறுவதற்காகவே தி.மு.க. பொதுக்குழு கூட்டத்துக்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விளக்க மனு ஆய்வில் உள்ளது என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications