அப்பாவி காஷ்மீர் சிறுவன் கொலை-பி.எஸ்.எப். அதிகாரி கைது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அப்பாவி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரல் அப்பாவி கொலை விவகாரத்தில் கடந்த 20 வருடங்களில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த அதிகாரி கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஷாலிமார் பகுதியைச் சேர்ந்த ஷகீத் ஃபாரூக் (16) தனது நண்பர்களுடன் சென்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இதில் எல்லைப் பாதுகாப்பு படை கமாண்டரான ரன்வீர் குமார் பிர்டிக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து பிர்டி முன்ஜாமீன் கோரி கோர்ட்டை அணுகினார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இதையடுத்து பிர்டியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்து அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ராணுவத் துப்பாக்கி மூலம் சிறுவனை பிர்டி கொன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீநகர் சிறப்பு எஸ்.பி. ஜாவீத் ரியாஸ் பீதார் கூறுகையில், பிர்டி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சனிக்கிழமை பிர்டி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். நான்கு நாள் போலீஸ் காவலிலும் அவரை எடுத்துள்ளோம் என்றார்.
இதற்கிடையே பிர்டியின் வக்கீல் மோல்வி அஜாஸ் அகமது கூறுகையில், பிர்டி தானாகவே ஸ்ரீகநகர் எஸ்.பியிடம் சரணடைந்தார். எனது கட்சிக்காரர் விசாரணைக்கு ஒத்துழைக்கு தயாராகவே உள்ளார். இதன் காரணமாகவே முன்ஜாமீன் மனுவை அவர் வாபஸ் பெறுமாறு என்னிடம் கூறினார் என்றார்.
முன்னதாக பிப்ரவரி 13ம் தேதி பிர்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து 13 எல்லைப் பாதுகாப்புப் படையினரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சிறுவன் ஷாகீத் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பெரும் போராட்டம் வெடித்தது. இதில் 120 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications