இல்லினாய்ஸ் கவர்னர் தேர்தலில் போட்டியிட அமெரிக்கா வாழ் இந்தியர் விருப்ப மனு
சிகாகோ: அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாண கவர்னர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு கேட்டு அமெரிக்க வாழ் இந்தியர் ஜனநாயக கட்சியில் மனு செய்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் மாகாண கவர்னர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அதிபர் ஒபாமாவின் ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றிய அமெரிக்க வாழ் இந்தியர் ராஜா கிருஷ்ணமூர்த்தி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதற்கான விருப்ப மனுவை ஜனநாயக கட்சியின் மாகாண கவுன்சிலில் அவர் தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி ராஜா கிருஷ்ணமூர்த்தி கூறுகையில்,
'இல்லினாய்ஸ் தொகுதியில் எனக்கு ஆதரவு உள்ளது. இதைக் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவிக்கும் வகையில் 10 ஆயிரம் பேரின் கையெழுத்தை விருப்ப மனுவின் பின்புறம் இணைத்துள்ளேன்' என்றார்.
ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு வாய்ப்பு கிடைத்தால், இல்லினாய்ஸ் மாகாண கவர்னராகப் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் உறுதி அளித்துள்ளார்.
இல்லினாய்ஸ் மாகாணத்தில் மொத்தம் 3 லட்சத்து 84 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இப்பதவிக்கு போட்டியிட வாய்ப்புக்கேட்டு ஜனநாயகக் கட்சியில் 150 பேர் வரை விருப்ப மனு கொடுத்துள்ளனர். மார்ச் மாத இறுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்.












Click it and Unblock the Notifications