மகளிர் மசோதா இன்றே நிறைவேறாததில் சோனியா அப்செட்
டெல்லி: சர்வதேச மகளிர் தினமான இன்றே மகளிர் மசோதா நிறைவேற்றப்படும் என்று பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அது நடைபெறாமல் போனதில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாம்.
சர்வதேச மகளிர் தினமான இன்றே, மகளிர் மசோதாவை ராஜ்யசபாவில் நிறைவேற்றி, அதே சூட்டோடு லோக்சபாவிலும் அடுத்த வாரத்திற்குள் கொண்டு வந்து நிறைவேற்றிட சோனியா காந்திதான் பெரும் ஆர்வத்துடன் இருந்தார்.
மகளிர் தினப் பரிசாக இந்திய பெண்களுக்கு இதை அளிக்கவும் அவர் ஆர்வமாக இருந்தார். ஆனால் இன்று நாடாளுமன்றத்தையே செயலிழக்க வைத்து விட்டனர் லாலு பிரசாத்தும், முலாயம் சிங் யாதவும்.
முலாயமை விட லாலு பிரசாத் யாதவ் படு ஆவேசமாக காணப்பட்டார். எங்களை மீறி நிறைவேற்றி விடுவீர்களா என்று படு ஆவேசமாக அவர் டிவிகளுக்கு பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு நில்லாமல், ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் லாலுவும், முலாயமும் அதிரடியாக விலக்கிக் கொண்டிருப்பதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை கலங்கடித்து விட்டது.
எதிர்ப்பு வரும் என்பதை அவர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இந்த அளவுக்கு நிலைமை மாறிப் போகும் என அவர்கள் நினைக்கவில்லையாம்.
இன்றைய நிகழ்வுகளால் சோனியா காந்தி பெரும் ஏமாற்றமடைந்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications