சிகாகோ அருகே இந்திய பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!
சிகாகோ: சிகாகோவில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன இந்திய பெண் ஒருவரின் சடலம் ஆற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிகாகோவில் மைனி டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்த இந்திய பெண் சங்கிதா கென் பட்டேல், வயது 32. இவர் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி சங்கிதா திடீரென காணவில்லை. அன்றைய தினம் வழக்கம்போல வேலைக்கு சென்றவர் திரும்பி வரவில்லை.
கணவரிடமும் எந்த தகவலும் அவர் சொல்லவில்லை. இதற்கு முன் இதுபோன்று சொல்லாமல் சங்கிதா எங்கும் சென்றதில்லை என அவரின் கணவர் கூறியுள்ளார்.
சங்கிதாவுக்கு கணவருடன் எந்தவித குடும்பத் தகராறும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிகாகோ அருகே மில்வாகீ அவென்யூ என்ற இடத்தில் தேஸ் பிளைன்ஸ் நதியில் பெண் சடலம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது.
நேற்று பிற்பகல் அதனை மீட்ட போலீசார், இந்த சடலம் சங்கிதா உடையது தான் என அடையாளம் கண்டனர்.
உடை, நகைகள் மற்றும் உடைமைகளை வைத்து குடும்பத்தாரும் சங்கிதாவின் அடையாளத்தை உறுதி செய்தனர்.
சங்கிதா தண்ணீரில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications