Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழம் கிடைத்து விட்டது- யாருக்கு எத்தனை சுளைகள் என்பதை பிறகு முடிவு செய்வோம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: இடஒதுக்கீடு என்பது ஒரு பழத்தைப் போன்றது. அந்த பழத்தினுடைய ஒரு சுளையை எடுத்துச் சாப்பிடுவதுதான் உள்ஒதுக்கீடு. இப்போது நமக்கு பழம் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சி அடைவோம். இனி யார் யாருக்கு எத்தனை சுளைகள் என்பது பற்றி தேவைப்படும்போது முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

ராஜ்யசபாவில் நேற்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பெரும் பரபரப்புக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இடஒதுக்கீடு என்பது ஒரு பழத்தைப் போன்றது. அந்த பழத்தினுடைய ஒரு சுளையை எடுத்துச் சாப்பிடுவதுதான் உள்ஒதுக்கீடு. இப்போது நமக்கு பழம் கிடைத்திருக்கிறது. மகிழ்ச்சி அடைவோம். இனி யார் யாருக்கு எத்தனை சுளைகள் என்பது பற்றி தேவைப்படும்போது முடிவு செய்வோம் என்று கூறியுள்ளார் முதல்வர்.

இதேபோல மசோதா நிறைவேறியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் அவர் தந்தி அனுப்பியுள்ளார்.

அதில்,

பாராளுமன்ற மேல்-சபையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டிருப்பது எனக்கு முற்றிலும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதன்மூலம், இந்திய மகளிருக்கும் அதிகாரம் அளிப்பதில் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் செழித்தோங்க புதிய வழி பிறந்துள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு தாங்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+