மலேசியா துணிக்கடையில் தீ: 4 இந்தியர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: மலேசியாவில் துணிக்கடை தீ விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் 4 பேர் பலியானார்கள்.
மலேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜோஹர் பாரு மாவட்டத்தில் மசாய் நகரில் உள்ள வர்த்தக கடைகள் கொண்ட கட்டிடத்தில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
நேற்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் துணிக்கடை, எழுதுபொருட்கள் விற்பனையகம் உள்ளிட்ட பல்வேறு கடைகள் தீப்பிடித்து எரிந்தன.
இதில் துணிக்கடையில் வேலை செய்துகொண்டிருந்த 2 ஊழியர்கள் மற்றும் அவர்களின் நண்பர்கள் இருவர் என நான்கு பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர்.
பலியான நான்கு பேரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் உடனடியாக தப்பிக்க முடியாமல் போனதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications