பென்னாகரம் இடைத் தேர்தலில் 31 வேட்பாளர்கள் போட்டி
தர்மபுரி: பென்னாகரம் இடைத் தேர்தலில் 31 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர். இங்கு நான்கு முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
பென்னாகரத்தில் மார்ச் 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட மொத்தம் 37 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். வேட்பு மனுக்கள் கடந்த 11ம் தேதி பரிசீலிக்கப்பட்டன. அப்போது நான்கு பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
மனுக்களை வாபஸ் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் தரப்பட்டிருந்தது. இதையடுத்து தேமுதிக மாற்று வேட்பாளர் செந்தில்குமார், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் ரவி ஆகியோர் மனுக்களைத் திரும்பப் பெற்றனர்.
இதையடுத்து இறுதியாக 31 பேர் களத்தில் உள்ளனர். இந்த இறுதிப் பட்டியலை தொகுதி தேர்தல் அதிகாரி மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டார். மேலும், சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.
இறுதி வேட்பாளர் பட்டியல்..
1.இன்பசேகரன் (தி.மு.க.).
2.ஆர்.அன்பழகன் (அ.தி.மு.க.).
3.தமிழ்க்குமரன்,(பா.ம.க.).
4.காவேரி வர்மன்(தே.மு.தி.க) மற்றும் 27 சுயேச்சைகள்.












Click it and Unblock the Notifications