மோடியை விசாரிக்க எஸ்ஐடி சம்மன்- எதிர்த்து ஜேட்மலானி வழக்கு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக விசாராணைக்கு ஆஜராகுமாறு உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு முதல்வர் நரேந்திர மோடிக்கு சம்மன் பிறப்பித்துள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று கோரி பாஜக எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராம் ஜேட்மலானி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ கலு மார்வாரி மற்றும் ஜேடமலானி தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த சம்மனை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.
மார்ச் 11ம் தேதி மோடிக்கு எஸ்.ஐ.டி. சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த எஸ்.டி.யின் தலைவராக முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் செயல்படுகிறார்.












Click it and Unblock the Notifications