மாற்றுதிறன் படைத்தோருக்கு தமிழகத்தில் தனித் துறை அமைப்பு
Subscribe to Oneindia Tamil

இன்று சட்டசபையில் நிதியமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வரும் மாற்றுத் திறன் படைத்தோர் நலனுக்கென முதல்வர் கருணாநிதிநேரடி மேற்பார்வையில் தனித்துறை உருவாக்கப்படும்.
மாற்றுத் திறனாளி மாணவர்கள் உயர் கல்வி படிக்க இனிமேல் கல்விக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டங்களுக்காக பட்ஜெட்டில் ரூ. 176 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவர்களுக்கு மாதந்தோறும் அளிக்கப்பட்டு வரும் உதவித் தொகை ரூ. 400 ஆக உயர்த்தப்படுகிறது.
இதுதவிர முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் மாத உதவித் தொகைக்காக ரூ. 1,002 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் மூலம் 19 லட்சம் பேர் பயனடைவார்கள்.












Click it and Unblock the Notifications