அணுஉலை இழப்பீட்டு மசோதா - ஆரோக்கிய விவாதத்துக்கு தயார்! - பிருத்விராஜ் சவுகான்
டெல்லி: அணு உலைகள் விபத்து இழப்பீடு சட்ட மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆரோக்கியமான விவாதம் எழுப்பினால் அதைச் சந்திக்க அரசு தயார் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாக, 'அணுஉலைகள் விபத்து இழப்பீடு சட்ட மசோதா'வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு ரூ.2,500 கோடி வரை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக ரூ.300 கோடி இழப்பீடு அளித்தால் போதும்.
மேலும், அதிகபட்ச மொத்த இழப்பீடு தொகை மத்திய அரசு, அதாவது பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து அளிக்கப்படும். இதுபோன்று, இழப்பீடு கோருவதற்கான கால நிர்ணயம் உட்பட பல்வேறு ஷரத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளன.
எனவே பாஜக, இடதுசாரிகள் மற்றும் பல்வேறு எதிர்கட்சிகளும் இந்த மசோதா நிறைவேறுவதை கடுமையாக கண்டித்து வருகின்றன.
ஆனால், இந்த மசோதாவை நிறைவேற்றும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது. கடந்த வாரம் மசோதாவை நிறைவேற்றுவதாக அறிவித்தது. ஆனால் எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு பின்வாங்கியது.
இந்நிலையில், இதுபற்றி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் கூறுகையில், "இந்தியா தனது அணுசக்தித் துறையை பெருமளவுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான நேரமும் வாய்ப்புகளும் கைகூடி வந்துள்ளன.
அணுசக்தி இந்தியாவுக்கு மிகவும் அவசியத் தேவையானதாகவும் உள்ளது. எரிசக்தித் துறையில் நமது தேவைகளை நிறைவு செய்ய தொலைநோக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
அணு உலைகளை இந்தியாவில் அமைப்பது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் பேசி வருகிறோம்.
இந்த நிலையில் அணு உலைகளின் மூலமாக நேரும் விபத்து தொடர்பான மசோதா நாட்டிற்கு மிகவும் முக்கியமானது.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டால், அணுசக்தி உற்பத்தி திட்டத்தின் ஒட்டுமொத்த பணிகளே தாமதமாகும் நிலை ஏற்படும்.
எனவே நாட்டு நலன் கருதி எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அணு உலைகள் விபத்து இழப்பீடு சட்ட மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த ஒரு பொறுப்பான, நிஜமான பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது" என்றார்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications