அணுஉலை இழப்பீட்டு மசோதா - ஆரோக்கிய விவாதத்துக்கு தயார்! - பிருத்விராஜ் சவுகான்
டெல்லி: அணு உலைகள் விபத்து இழப்பீடு சட்ட மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆரோக்கியமான விவாதம் எழுப்பினால் அதைச் சந்திக்க அரசு தயார் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் தெரிவித்தார்.
அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான முக்கிய நடவடிக்கையாக, 'அணுஉலைகள் விபத்து இழப்பீடு சட்ட மசோதா'வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
அதன்படி, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால், இழப்பீடு ரூ.2,500 கோடி வரை வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் அதிகபட்சமாக ரூ.300 கோடி இழப்பீடு அளித்தால் போதும்.
மேலும், அதிகபட்ச மொத்த இழப்பீடு தொகை மத்திய அரசு, அதாவது பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து அளிக்கப்படும். இதுபோன்று, இழப்பீடு கோருவதற்கான கால நிர்ணயம் உட்பட பல்வேறு ஷரத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளன.
எனவே பாஜக, இடதுசாரிகள் மற்றும் பல்வேறு எதிர்கட்சிகளும் இந்த மசோதா நிறைவேறுவதை கடுமையாக கண்டித்து வருகின்றன.
ஆனால், இந்த மசோதாவை நிறைவேற்றும் முனைப்பில் மத்திய அரசு உள்ளது. கடந்த வாரம் மசோதாவை நிறைவேற்றுவதாக அறிவித்தது. ஆனால் எதிர்க்கட்சியினரின் கடும் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு பின்வாங்கியது.
இந்நிலையில், இதுபற்றி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிருத்விராஜ் சவுகான் கூறுகையில், "இந்தியா தனது அணுசக்தித் துறையை பெருமளவுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான நேரமும் வாய்ப்புகளும் கைகூடி வந்துள்ளன.
அணுசக்தி இந்தியாவுக்கு மிகவும் அவசியத் தேவையானதாகவும் உள்ளது. எரிசக்தித் துறையில் நமது தேவைகளை நிறைவு செய்ய தொலைநோக்கு திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன.
அணு உலைகளை இந்தியாவில் அமைப்பது தொடர்பாக அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் பேசி வருகிறோம்.
இந்த நிலையில் அணு உலைகளின் மூலமாக நேரும் விபத்து தொடர்பான மசோதா நாட்டிற்கு மிகவும் முக்கியமானது.
இந்த மசோதாவை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டால், அணுசக்தி உற்பத்தி திட்டத்தின் ஒட்டுமொத்த பணிகளே தாமதமாகும் நிலை ஏற்படும்.
எனவே நாட்டு நலன் கருதி எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும். அணு உலைகள் விபத்து இழப்பீடு சட்ட மசோதா தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் எந்த ஒரு பொறுப்பான, நிஜமான பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது" என்றார்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications