தமிழகத்தில் வெளிநாட்டு பல்கலை.கள் தேவையில்லை-வீரமணி
இடஒதுக்கீட்டிற்கு இடம் அளிக்காத வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
"வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுக்கு அனுமதி அளிப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. கல்வியை முழுமையான வியாபாராமாக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவது சரியல்ல.
அப்படி வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளித்தால் இடஒதுக்கீட்டிற்கு இடம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அந்த பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது.
வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வருவதை அரசியல் கட்சிகள், இடதுசாரி கட்சிகள் எதிர்க்கிறாகள். எல்லா முற்போக்கு சிந்தனை உள்ள கட்சிகளும், இதில் உள்ள ஆபத்தை புரிந்து தடுத்து நிறுத்த முன்வர வேண்டும் என்றார்...' வீரமணி.












Click it and Unblock the Notifications