திருமணத்துக்கு முன் செக்ஸ் - உச்சநீதிமன்ற கருத்துக்கு ஆந்திர பீடாதிபதி கடும் எதிர்ப்பு
ஐதராபாத்: திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த கருத்துக்கு ஆந்திர பீடாதிபதி ஸ்ரீவிஸ்வயோகி விஸ்வம்ஜி மகராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று குறிப்பிட்டு கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்தார்.
அவரது கருத்து இளைய சமுதாயத்தை சீரழிப்பதாக உள்ளது எனக் கூறி தமிழ்நாடு முழுவதும் 22 கிரிமினல் வழக்குகள் குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்டன. இவற்றை ரத்து செய்யக் கோரி குஷ்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருமணத்திற்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றம் அல்ல என கருத்து கூறினர்.
இதற்கு ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பீடாதிபதி ஸ்ரீவிஸ்வயோகி விஸ்வம்ஜி மகராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தெலுங்கு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்,
'திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது இந்து மத தர்மத்திற்கு முற்றிலும் எதிரானது. எனவே நீதிபதிகள் கூறிய கருத்துக்கு நான் கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன்.
திருமணத்திற்கு முன்பு ஆண்-பெண் இருவரும் கற்புடன் இருப்பது அவசியம். இந்து தர்மப்படி திருமணத்தின் போது மணப்பெண் கன்னியாக இருக்க வேண்டும். நம் நாட்டில் காலம் காலமாக திருமண சடங்கின்போது கன்னியாதானம் அளிக்கப்பட்டு வருகிறது.
நம் நாட்டை பொறுத்தவரை பெண்கள் அனைவரும் கற்பு நெறி தவறாமல் இருக்கவே விரும்புகிறார்கள். கற்பு நெறி தவறும் பெண்கள் தான் கற்பு பற்றி தவறான கருத்துக்களை வெளியிட்டு நம் கலாச்சாரத்திற்கு வேட்டு வைத்து வருகிறார்கள்.
இதை அனைத்து இந்திய மக்களும் தட்டிக்கேட்க வேண்டும். இந்தியர்கள் புனிதமாக கருதும் திருமண உறவை கொச்சைப்படுத்துவதை யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடாது. இது இளைய தலைமுறையின் மனதில் விஷத்தை விதைத்து விடும்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தவறான செக்ஸ் உறவை நியாயப்படுத்த கிருஷ்ணர் - ராதையை உதாரணமாக காட்டி உள்ளார்கள்.
இதற்கு இந்துமத பீடாதிபதிகள் சார்பில் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு பிரம்மச்சாரி. இவர் சிறு குழந்தையாக இருந்தபோதே கோபியருடன் இருந்தார் என்று புராணங்கள் கூறுகிறது.
இதை வைத்து பார்க்கும் போது ஒரு குழந்தை தனது பெற்றோர், சகோதர- சகோதரிகளுடன் எந்த மாதிரியான அன்பு, பாசம் வைத்திருக்கிறதோ அதே போன்ற அன்பைத் தான் கிருஷ்ணன் வெளிப்படுத்தினார் என்று சொல்லலாம்.
ஆத்மார்த்தமான அன்பை போதிப்பதற்கு உதாரணமாகத்தான் ஸ்ரீகிருஷ்ணா-ராதையை கூறலாமே தவிர செக்சுடன் தொடர்புபடுத்தக் கூடாது.
திருமணத்திற்கு முந்தைய உறவு சட்டப்படி தவறு இல்லை என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ஆனால் இது இந்துமத தர்மப்படி மிகவும் தவறானது' என்று கூறியுள்ளார்.
இதேபோல் ஆந்திராவில் உள்ள பல்வேறு இந்து அமைப்புகளும் கற்பு பற்றிய உச்சநீதிமன்ற கருத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
-
சுந்தர்.சி-க்கு அரசியல் தெரியாதா? மதுரை மத்திய தொகுதி மக்கள் மிரளப் போறாங்க.. பில்டப் ஏற்றும் குஷ்பு -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்!












Click it and Unblock the Notifications