மேற்கு தொடர்ச்சி மலையில் நக்சல்கள்? - அதிரடி படையினர் திடீர் ரோந்து
புளியங்குடி: நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளதா என அதிரடி படை வீரர்கள் முகாமிட்டு தேடி வருகின்றனர்.
தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை கன்னியாகுமரியில் இருந்து 400 கி.மீ அளவுக்குப் பரந்து விரிந்துள்ளது. இம்மலை பகுதியில் நக்சைலட்டுகள் தங்கியிருந்து நாசவேலையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நக்சலைட்டுகளுடன் வடமாநிலங்களை சேர்ந்த தீவிரவாதிகளும் தமிழக மேற்கு தொடர்ச்சி எல்லை பகுதியில் தங்கியிருப்பதாகவும் அதிரடி படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தற்போது நக்சலைட் கும்பல் வடமாவட்டங்களில் இருந்து இடம் பெயர்ந்து தேனி மாவட்ட மலைப்பகுதியில் புகுந்ததாக கிடைத்த தகவலை அடுத்து கடந்த வாரம் அதிரடி படை போலீசார் வருசநாடு மலைப்பகுதியில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
ராஜபாளையம் முகாம் அதிரடிபடையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சண்முக நயினார் தலைமையில் 6 போலீசார் செங்கோட்டை மலைப்பகுதியில் இருந்து அடவிநயினார் அணைக்கட்டு, திருமலைகோவி்ல் மலைப்பகுதி, கருப்பாநதி அணை, பொன்னையாபுரம் வழியாக முந்தல் மலை வந்தடைந்தனர்.
தொடர்ந்து புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகள் வழியாக தலையணையில் தேடுதல் வேட்டையை தொடருகின்றனர்.












Click it and Unblock the Notifications