கருத்துக் கணிப்பு வியப்பளிக்கிறது-மக்கள் மனதில் பாமகவுக்கே முதலிடம்: ராமதாஸ்
சென்னை: லயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பு முரண்பாடாக உள்ளது. பாமகவுக்கு அவர்கள் 2வது இடத்தைக் கொடுத்தாலும், மக்கள் மனதில் பாமகவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
பென்னாகரம் இடைத்தேர்தல் நிலவரம் குறித்து சென்னை லயோலா கல்லூரியின் மக்கள் ஆய்வகத்தை சேர்ந்த குழுவினர் கருத்து கணிப்பு வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த இடைத்தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என வாக்காளர்கள் முடிவு செய்வதில் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணிகளை இனம் காணவும், அந்த காரணிகளின் தாக்கத்தால் வாக்காளர்களின் எண்ணப்போக்கில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்யவும் இந்த கள ஆய்வை நடத்தியதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் கண்டறிந்துள்ள காரணிகள் மற்றும் அவற்றால் வாக்காளர்களின் எண்ணப்போக்கில் ஏற்பட போகும் மாற்றத்திற்கும், இவர்கள் கள ஆய்வில் தெரிவித்து இருக்கும் முடிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சமே இந்த இடைத்தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் காரணிகளில் முதன்மையானது என்று ஆய்வில் தெரியவந்துள்ளதாக கூறப்பட்டிருக்கிறது. வேலையில்லாத திண்டாட்டம் இரண்டாவது காரணியாக ஆய்வறிக்கை கூறுகிறது. இவைதான் இந்த தேர்தலின் முடிவை நிர்ணயிக்க போகும் வாக்காளர்களின் எண்ணப்போக்கின் மாற்றங்களை உருவாக்கப்போகின்றன என்று சொல்லி விட்டு அதற்கு நேர் மாறான முடிவை ஆய்வறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.
பென்னாகரம் தொகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பஞ்சத்திற்கும், வேலையில்லாத திண்டாட்டத்திற்கும் யார் காரணம்? எந்த ஆட்சி காரணம்? 1967-ம் ஆண்டிற்கு பின்னர் தமிழகத்தில் 5 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்திருக்கிறது. ஆனாலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்கவில்லை. வேலையில்லாத திண்டாடத்தை போக்கவில்லை. தி.மு.க. ஆட்சியின் அலட்சியம் காரணமாகவே காவிரி கரையில் வாழ்கின்ற பென்னாகரம் மக்கள் குடிநீருக்காக இன்றளவும் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பிழைப்புக்காக வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று கொத்தடிமைகளாக வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இவற்றையெல்லாம் மறந்து விட்டா இந்த இடைத்தேர்தலில் தி.மு.க.விற்கு அவர்கள் வாக்களிப்பார்கள்? அப்படி சொல்லுவது முன்னுக்குப்பின் முரணாக இல்லையா?
குடிநீருக்கு தவியாய் தவிர்ப்பதையும், பிழைப்பிற்காக சொந்த மண்ணை விட்டு வெளியேறி கொத்தடிமைகளாக வெந்து மடிவதையும் மறந்து விட்டு தி.மு.க.விற்கு வாக்களிப்பார்கள் என்ற முடிவிற்கு கள ஆய்வை நடத்தியவர்கள் எப்படி வந்தார்கள்? என்பது புரியாத புதிராக உள்ளது.
வாக்களிக்க பணம் கொடுப்பது தவறு என்றும், அந்த பணத்தை வாங்குவதும் தவறு என்றும் வாக்காளர்களில் அதிகம் பேர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள் என்று கள ஆய்வு அறிக்கையின் ஒரு இடத்தில் சொல்லியிருக்கிறார்கள். பணம் கொடுப்பதில் தி.மு.க. தான் முன்னணியில் இருக்கிறது என்றும் கண்டறிந்து அறிவித்து இருக்கிறார்கள். இதையெல்லாம் தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்றும், எதுவும் செய்ய முடியாமல் ஆணையம் தவித்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அதே நேரத்தில் இவற்றையெல்லாம் புறந்தள்ளி விட்டு வாக்காளர்கள் தி.மு.க.விற்கு அதிகம் பேர் வாக்களிப்பார்கள் என்றும், இப்போதைக்கு அந்த கட்சி முதலிடத்தில் இருக்கிறது என்ற ஒரு முடிவிற்கு கள ஆய்வு நடத்தியவர்கள் எப்படி வந்தார்கள்? என்பது வியப்பாகவும், விந்தையாகவும் இருக்கிறது.
லயோலா கல்லூரி கள ஆய்வு முடிவு தொகுதி மக்களின் உண்மையான எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கவில்லை. உண்மை நிலைக்கும், கள ஆய்வின் முடிவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பணமே இந்த தேர்தலில் பிரதான இடத்தை பெற்றிருக்கிறது என்பது உண்மை தான். ஆனால் அதுவே முடிவை நிர்ணயிக்கப்போவதில்லை. பணத்தை பெற்றுக்கொண்டுள்ள வாக்காளர்களில் பெரும்பாலானார் தங்களது மனசாட்சியின் படி விரும்புகின்ற கட்சிக்கு வாக்களிப்பது என்ற முடிவில் இருக்கிறார்கள்.
இன்றைய நிலையில் பென்னாகரம் வாக்காளர்களில் பெரும்பாலானோர் விரும்புகின்ற கட்சி பா.ம.க. தான். இரண்டாவது இடமல்ல. வாக்காளர்கள் மனதில் பா.ம.க. முதலிடத்திலேயே இருக்கிறது. அதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார் ராமதாஸ்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications