நள்ளிரவில் இடிந்து விழுந்த அரசு பள்ளி கட்டிடம்
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் அருகே அரசு பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பேட்துரைசாமிபுரத்தில் அரசு ஊராட்சி ஓன்றிய காமராஜர் தொடக்கப்பள்ளி உள்ளது.
இப்பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் 35 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
2 ஆசிரியர்கள் பணி புரிகின்றனர். இடிந்து விழும் நிலையில் இருந்த இந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கடந்த 5,6 ஆண்டுகளாக ஊர்மக்கள் ஸ்ரீவைகுண்டம் யூனியன் நிர்வாகத்திற்கு குரல் கொடுத்தனர்.
ஆனால் அவர்கள் பள்ளியை சீரமைக்க கவனம் செலுத்தவில்லை.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை உத்திரம் திடீரென இடிந்து விழுந்தது.
நள்ளிரவில் விழுந்த உத்திரம் பகலில் விழுந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும்.
பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததால் இன்று அங்குள்ள பத்திரகாளியம்மன் கோவிலில் வகுப்புகள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications