ஒகனேக்கல் திட்டம் – தமிழகம் குறித்து மத்திய அரசிடம் புகார் செய்ய கர்நாடகா முடிவு
ஹூப்ளி: ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறி மத்திய அரசிடம் புகார் கொடுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக மாநில நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் சட்டவிரோதமானது. இந்தத் திட்டம் பெரும் குழப்பத்துடன் கூடியது. எல்லைப் பகுதியில் ஓடும் காவிரி ஆற்றில் குடிநீர்த் திட்டம் மேற்கொள்ளப்படுவதாக தமிழகம் கூறுகிறது. ஆனால் மத்திய அரசிடம் இதற்கான அனுமதியை அது பெறவில்லை.
இதுதொடர்பாக நாங்கள் மத்திய அரசிடம் பலமுறை புகார் கொடுத்தும் கூட மத்திய அரசு அதைக் கண்டுகொள்ளவில்லை.
சர்ச்சைக்குரிய பகுதியில் விரிவான சர்வே நடத்தப்பட வேண்டும். அதன் பிறகு தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை மேற்கொள்ளலாம். அதுவரை அத்திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும்.
இதுதொடர்பாக மத்திய அரசிடம் புகார் செய்ய அடுத்த வாரம் டெல்லி செல்லவுள்ளேன். மத்திய நீர் வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சாலை ஒகேனக்கல்லில் தமிழக அரசு மேற்கொள்ளும் குடிநீர்த் திட்டத்தை நிறுத்த உத்தரவிடும்படி கேட்டுக் கொள்வேன் என்றார் பொம்மை.












Click it and Unblock the Notifications