மு.க.அழகிரி, தயாநிதி மாறனின் செல்போன்களை ஒட்டு கேட்க உத்தரவா?

சென்னை அடையாரைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் நிறுவனத்திடம் இந்த உளவுப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என்று ஜாபர் சேட் மறுத்துள்ளார். அந்த சாப்ட்வேர் நிறுவனமும் இதை மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழக தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் உபாத்யாவுக்கும் இடையிலான தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு அது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல அமைச்சர் பூங்கோதைக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலும் ஒட்டுக் கேட்கப்பட்டு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்னொரு பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் பணியை சென்னையைச் சேர்ந்த தனியார் சாப்ட்வேர் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பு என்ற இயக்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளரான புகழேந்தி என்பவர் கூறுகையில், சட்டவிரோதமான முறையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டு வருகின்றன. இது அரசியல் சட்டத்தின் 19(1), 21 ஆகியவற்றை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்றார்.
இந்த ஒட்டுக் கேட்புப் பணியில் மு.க.அழகிரியின் செல்போன் எண்ணும் இடம் பெற்றிருப்பாதக கூறப்படுவதுதாதன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் தற்போது வாரிசுப் போர் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மு.க.ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையிலான அந்தப் போர் பகிரங்கமாக அவ்வப்போது வெடித்து வருகிறது.
இந்த நிலையில் அழகிரியின் செல்போன் ஒட்டுக் கேட்கப்படும் எண்களின் வரிசையில் இரு்பபதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகிரி, தயாநிதி மாறன் தவிர தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், அதிமுகவின் மைத்ரேயன், பாமகவின் வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளனவாம்.
தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையனின் செல்போன் எண்ணும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.
மாநில உளவுத்துறை தலைவர் ஜாபர்சேட் உத்தரவின் பேரில் அடையாரைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனம் இந்தப் பணியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஜாபர்சேட்டும், அந்த நிறுவனமும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு












Click it and Unblock the Notifications