மு.க.அழகிரி, தயாநிதி மாறனின் செல்போன்களை ஒட்டு கேட்க உத்தரவா?

சென்னை அடையாரைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் நிறுவனத்திடம் இந்த உளவுப் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இது முற்றிலும் தவறான தகவல் என்று ஜாபர் சேட் மறுத்துள்ளார். அந்த சாப்ட்வேர் நிறுவனமும் இதை மறுத்துள்ளது.
கடந்த ஆண்டு தமிழக தலைமைச் செயலாளர் திரிபாதிக்கும், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் உபாத்யாவுக்கும் இடையிலான தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டு அது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல அமைச்சர் பூங்கோதைக்கும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலும் ஒட்டுக் கேட்கப்பட்டு வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இன்னொரு பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. மத்திய அமைச்சர்கள் மு.க.அழகிரி, தயாநிதி மாறன் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக அந்தத் தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் பணியை சென்னையைச் சேர்ந்த தனியார் சாப்ட்வேர் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தமிழ்நாடு மக்கள் உரிமை அமைப்பு என்ற இயக்கம் கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளரான புகழேந்தி என்பவர் கூறுகையில், சட்டவிரோதமான முறையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், காவல்துறை அதிகாரிகளின் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்டு வருகின்றன. இது அரசியல் சட்டத்தின் 19(1), 21 ஆகியவற்றை அப்பட்டமாக மீறும் செயலாகும் என்றார்.
இந்த ஒட்டுக் கேட்புப் பணியில் மு.க.அழகிரியின் செல்போன் எண்ணும் இடம் பெற்றிருப்பாதக கூறப்படுவதுதாதன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் தற்போது வாரிசுப் போர் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. மு.க.ஸ்டாலினுக்கும், அழகிரிக்கும் இடையிலான அந்தப் போர் பகிரங்கமாக அவ்வப்போது வெடித்து வருகிறது.
இந்த நிலையில் அழகிரியின் செல்போன் ஒட்டுக் கேட்கப்படும் எண்களின் வரிசையில் இரு்பபதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அழகிரி, தயாநிதி மாறன் தவிர தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய காங்கிரஸ் தலைவர்கள், அதிமுகவின் மைத்ரேயன், பாமகவின் வேல்முருகன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் இதில் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோரின் பெயர்களும் இதில் இடம் பெற்றுள்ளனவாம்.
தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையனின் செல்போன் எண்ணும் இதில் இருப்பதாக கூறப்படுகிறது.
மாநில உளவுத்துறை தலைவர் ஜாபர்சேட் உத்தரவின் பேரில் அடையாரைச் சேர்ந்த சாப்ட்வேர் நிறுவனம் இந்தப் பணியை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. ஆனால் இதை ஜாபர்சேட்டும், அந்த நிறுவனமும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications