மோடியிடம் முதல் சுற்று விசாரணையை முடித்து விட்டு 3 அரசு வக்கீல்களையும் விசாரித்த எஸ்.ஐ.டி.

குஜராத்தில் நடந்த மிகப் பெரிய மதக் கலவரத்தின்போது, குல்பர்க் சொசைட்டியில் நடந்த மிகக் கொடூரமான கொலைகள் தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடியை நேற்று முன்தினம், 2 கட்டமாக விசாரித்தது எஸ்.ஐ.டி.
முதலில் பகலில் ஐந்தரை மணி நேரம் மோடியை விசாரித்த எஸ்ஐடி பின்னர் அவரை அனுப்பி வைத்தது. மீண்டும் இரவு 9 மணிக்கு மோடியை வரவழைத்த எஸ்.ஐ.டி. சுமார் நான்கரை மணி நேரம் விசாரித்தது.
இந்த நிலையி்ல் அன்றைய தினமே மோடி அரசால் கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பான வழக்கில், மோடி அரசால், நியமிக்கப்பட்ட மூன்று அரசு வக்கீல்களையும் எஸ்ஐடி விசாரித்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
மோடியிடம் முதல் சுற்று விசாரணையை முடித்து விட்டு அனுப்பிய பின்னர் இந்த மூன்று வக்கீல்களையும் வரவழைத்து எஸ்ஐடி விசாரித்துள்ளது. அந்த வக்கீல்கள் - வி.பி.ஆத்ரே, பியூஷ் காந்தி, எச்.எம். துருவ் ஆகியோர்.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இந்த மூன்று பேரும்தான் அரசு வக்கீல்களாக செயல்பட்டனர். இவர்களில் துருவ் மூத்த வக்கீலாவார்.
இவர்களிடம் 20 நிமிடங்கள் விசாரணை நடந்துள்ளது. இவர்கள் மீது தீஸ்தா செட்லவாத் என்பவர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் மூன்று பேரையும் அழைத்து எஸ்ஐடி விசாரித்துள்ளது.
3 பேருக்கும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தளம், பாஜக ஆகியவற்றுடன் தொடர்பு உள்ளதா, தற்போதைய அரசுக்கு சாதகமாக இவர்கள் நடந்து கொண்டார்களா என்பது குறித்து விசாரிக்கப்பட்டதாக தெரிகிறது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications