கோவையில் கொடூரம் – நகைக்காக முதிய தம்பதி படுகொலை
கோவை: நகைக்காக வயதான தம்பதிகள் கோவை மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சோமனூரைச் சேர்ந்தவர் ராயப்பன். 85 வயதான இவர் தனது மனைவி சின்னம்மாளுடன் (78) தனியாக வசித்து வந்தார்.
நேற்று இரவு இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். பின்னர் கத்தி முனையில் வயதான இருவரையும் மிரட்டி சின்னம்மாள் அணிந்திருந்த 7 பவுன் தாதலிச் சங்கிலி மற்றும் ஒரு பவுன் மோதிரத்தைப் பறித்துள்ளனர்.
அப்போது சின்னம்மாள் போராடவே, அவரை அந்தக் கும்பல் ஈவு இரக்கமின்றி கழுத்தை நெரித்துக் கொலை செய்தது. இதைப் பார்த்துப் பதறிப் போய் ஓடி வந்து தடுக்க முயன்ற ராயப்பனை அந்தக் கும்பல் தலையில் அடித்துள்ளது. இதில் அவரும் பரிதாபமாக அங்கேயே உயிரிழந்தார்.
வயதான தம்பதியினர் நகை பறிக்கும் கும்பலால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications