நில ஆக்கிரமிப்பு சர்ச்சை – நீதிபதி பி.டி.தினகரன் சிக்கிம் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்

நில ஆக்கிரமிப்பு சர்ச்சையில் சிக்கிய பி.டி.தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக்கும் முடிவை உச்சநீதிமன்ற காலேஜியம் கைவிட்டது. பின்னர் சமீபத்தில் தான் அவரை விடுமுறையில் போக உத்தரவிட்டது. ஆனால் அதை ஏற்று விடுப்பில் போக மறுத்து விட்டார் நீதிபதி தினகரன்.
இதையடுத்து சிக்கிம் உயர்நீதிமன்றத்திற்கு தினகரனை உச்சநீதிமன்ற காலேஜியம் இடமாற்றம் செய்துள்ளது.
மேலும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, தற்காலிக தலைமை நீதிபதி மதன் லோகுரின் பெயரையும் இறுதி செய்து அறிவித்துள்ளது காலேஜியம்.
கடந்த டிசம்பர் மாதம் ராஜ்யசபாவில் தினகரனுக்கு எதிராக 76 உறுப்பினர்கள் நீக்க தீர்மானத்தைத் தாக்கல் செய்தது முதல் நீதிபதிப் பணியை ஆற்றாமல் ஒதுங்கி இருந்து வருகிறார் தினகரன்.
தினகரன் மீதான புகார்கள் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு ஏற்கனவே விசாரணையை தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications