தேனிலவு கொண்டாட வருமாறு சானியாவுக்கு பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் முதல்வர் அழைப்பு

சானியா மிர்ஸாவுக்கும், சோயப் மாலிக்குக்கும் வருகிற 15ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்தத் திருமணம் ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி விட்டது. முதலில் ஆயிஷா ரூபத்தில் பிரச்சினை வந்தது. பின்னர் பாகிஸ்தான் வீரரை எப்படி சானியா மணக்கலாம் என்று சிலர் பிரச்சினை கிளப்பினர். போராட்டங்களும் தொடர்ந்து வருகின்றன.
இந்த நிலையில் இன்னொரு புதுக் குழப்பமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீரின் ஒரு பகுதியான கில்ஜிட்- பல்திஸ்தான் பிராந்திய முதல்வர், சானியா தங்களது பகுதிக்கு வந்து தேனிலவைக் கொண்டாட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
முன்பு இது வடக்குப் பிராந்தியம் என அழைக்கப்பட்டு வந்த்து. சில மாதங்களுக்கு முன்புதான் இதை பாகிஸ்தானின் ஒரு மாகாணமாக கிலானி தலைமையிலான பாகிஸ்தான் அரசு அறிவித்தது.
இதுகுறித்து கில்ஜிட்- பல்திஸ்தான் முதல்வர் சையத் மெஹதி ஷா கூறுகையில், எங்களது மாகாணத்தில் வந்து சானியா- சோயப் தம்பதி தேனிலவைக் கொண்டாட வேண்டும். இதை அன்பு அழைப்பாக அவர்கள் ஏற்று இங்கு வர வேண்டும் என்றார்.
சானியா- சோயப் திருமணத்தை வைத்து காஷ்மீர்ப் பிரச்சினையை சர்வதேசப் பிரச்சினையாக்க முயல்வதாக இது கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications