ராமே​ஸ்​வ​ரம் கோயி​லில் தடை​யை​ மீறி பஞ்​சாங்​கம் வாசித்த 5 இந்து முன்​ன​ணி​யி​னர் கைது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்​வ​ரம்: ராமே​ஸ்​வ​ரம் ராம​நா​த​சு​வாமி ​கோயி​லில் தடை​யை​ மீறி பஞ்சாங்​கம் வாசிக்க முயன்ற 5 இந்து முன்​ன​ணி​யி​னர் கைது செய்யப்பட்டனர்.

சித்​தி​ரைத் திரு​நா​ளன்று சில கோயில்​க​ளி​லும் புதிய
பஞ்​சாங்கம் வாசிக்​கும் நிகழ்ச்சி நடப்​பது வழக்​கம்.​ ஆனால், தமி​ழக அரசு தை முதல் தேதியே தமிழ்ப் புத்​தாண்டு என்று அறி​வித்​த​தால் கடந்த ஆண்டு முதல் கோயில்​க​ளில் புதிய பஞ்​சாங்​கம் வாசிக்​கும் நிகழ்ச்​சி​கள் நடக்​க​வில்லை.​

இந் நிலையில் ​இந்த ஆண்டு சித்​திரை மாதம் முதல் தேதியான நேற்று தமிழ்ப் புத்​தாண்டை கொண்​டா​டும்
வகை​யில் இந்து முன்​ன​ணி​ மாவட்​டச் செய​லா​ளர் ராம​மூர்த்தி தலை​மை​யில் 5 பேர் ராமே​சு​வ​ரம் ராம​நா​த​சு​வாமி கோயி​லில் புதிய பஞ்​சாங்​கம் வாசிக்க முயன்ற​னர்.​

இதற்கு ஏற்கனவே போலீசார் தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறிச் சென்​ற அவர்​க​ளைத் போலீசார் தடுத்தனர்.

இதையடுத்து கோயி​லின் வாசல் முன்​ அமர்ந்து புதிய பஞ்​சாங்​கத்தை அவர்கள் வாசித்​த​னர்.​

இதையடுத்து ராம​மூர்த்தி உள்​ளிட்ட 5 பேரை​யும் போலீசார் கைது​ செய்​த​னர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+