ராமேஸ்வரம் கோயிலில் தடையை மீறி பஞ்சாங்கம் வாசித்த 5 இந்து முன்னணியினர் கைது
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தடையை மீறி பஞ்சாங்கம் வாசிக்க முயன்ற 5 இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
சித்திரைத் திருநாளன்று சில கோயில்களிலும் புதிய
பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். ஆனால், தமிழக அரசு தை முதல் தேதியே தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்ததால் கடந்த ஆண்டு முதல் கோயில்களில் புதிய பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சிகள் நடக்கவில்லை.
இந் நிலையில் இந்த ஆண்டு சித்திரை மாதம் முதல் தேதியான நேற்று தமிழ்ப் புத்தாண்டை கொண்டாடும்
வகையில் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் 5 பேர் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் புதிய பஞ்சாங்கம் வாசிக்க முயன்றனர்.
இதற்கு ஏற்கனவே போலீசார் தடை விதித்திருந்த நிலையில் தடையை மீறிச் சென்ற அவர்களைத் போலீசார் தடுத்தனர்.
இதையடுத்து கோயிலின் வாசல் முன் அமர்ந்து புதிய பஞ்சாங்கத்தை அவர்கள் வாசித்தனர்.
இதையடுத்து ராமமூர்த்தி உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications