காலாவதி மருந்து வழக்கில் முக்கியக் குற்றவாளி பாஸ்கரன் தஞ்சை கோர்ட்டில் சரண்
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: காலாவதி மருந்து விற்பனை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளியான பாஸ்கரன் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
காலாவதி மருந்து வழக்கில் மீனாட்சி சுந்தரம், சஞ்சய் குமார் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்ட்னர். இவர்களில் 11 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.
இவர்களில் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கே.கே.நகரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர்தான் முக்கியப் பங்கு வகித்த்தாக தெரிவித்தனர்.
இதையடுத்து பாஸ்கரனை போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர். தற்போது இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ள்ளது. இந்த நிலையில், பாஸ்கரன் இன்று தஞ்சாவூர் கோர்ட்டில் சரணடைந்தார்.
இவரை காவலில் எடுத்து விசாரிக்க திங்கள்கிழமை தஞ்சாவூர் கோர்ட்டில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்யவுள்ளனர்.












Click it and Unblock the Notifications