பஞ்சமி நிலங்களை மீட்க வழக்கு - சமூக சமத்துவப் படை தலைவர் சிவகாமி
நெல்லை: பஞ்சமி நிலங்களை மீட்க கோர்ட்டில் வழக்கு தொடர்வோம் என சமூக சமத்துவபடை நிறுவனத் தலைவர் சிவகாமி தெரிவித்தார்.
நெல்லையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி ..
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறில் கடந்த 14ம் தேதி பஞ்சமி நிலமீட்பு கூட்டம் நடத்தினோம். பஞ்சமி நிலங்கள் அக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதை கண்டு சும்மா இருக்க முடியாது. சிறுதாவூரில் அக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்படும் என முதல்வர் கருணாநிதி அன்று மாலை அறிவித்தார். இதுவரை பஞ்சமி நில மீட்பு குறித்து அரசு தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இது எங்களுக்கு கிடைத்த வெற்றி.
தமிழகம் முழுவதும் 10 லட்சத்து 74 ஏக்கர் பஞ்சமி நிலங்கள் உள்ளன. 1 லட்சம் பஞ்சமி நிலங்கள் குறித்த விபரங்கள் எங்களிடம் உள்ளன. நெல்லை மாவட்டத்தில் 3 ஆயிரம் பஞ்சமி நிலங்கள் உள்ளன. இவற்றை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடர்வோம். மே மாதம் அனைத்து மாவட்டங்களிலும் பஞ்சமி நில மீட்பு கருத்தரங்குகள் நடத்தப்படும். பஞ்சமி நிலங்கள் அதிகமாக உள்ள இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி சம்பந்தப்பட்டவருடன் பேச்சு வார்த்தை நடத்தி சமூக நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.
நிலம் இல்லாதவர்களுக்கு நிலம், வீடு இல்லாதவர்களுக்கு வீடு, பஞ்சமி நிலம் மீ்ட்பு, கோயில் நிலங்களை நிலமற்றவர்களுக்கு வழங்குவது, கல்வி, வேலைவாய்ப்பில் பெண்களுக்கு இடஓதுக்கீடு, போன்ற எங்கள் கட்சியின் முக்கிய அம்சங்களால் கவரப்பட்டு ஏராளமானோர் கட்சியி்ல் இணைந்து வருகின்றனர். கட்சி வளர்ச்சி எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது என்றார் சிவகாமி.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications