2-ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விசாரணையை சந்திக்கத் தயார்: ஆ. ராசா
டெல்லி: 2-ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து எத்தகைய விசாரணையையும் சந்திக்கத் தயாராக இருப்பதாக மத்திய தொலைத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ராசா கூறினார்.
2-ஜி அலைக்கற்றை உரிமத்தை மிகக் குறைந்த விலைக்கு அளித்ததால் அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்டது.
மாநிலங்களவையில் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது:
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக தற்போது சிபிஐ வழக்கு உள்ளது. இதுகுறித்து எவ்வித விசாரணையையும் சந்திக்கத் தயாராக உள்ளேன்.
சிபிஐ கோரும் அனைத்து தகவல்கள் மற்றும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதோடு, தேவையான ஆவணங்களை அளிக்கவும் எனது துறை தயாராக உள்ளது.
தற்போது 3-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலம் நடைபெறுகிறது.
இந்த ஏல நடைமுறை முற்றிலும் வெளிப்படையானதாக நடத்தப்படுகிறது. மத்திய ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் பிற துறைகள் ஏல நடைமுறையைக் கண்காணிக்கின்றன.
3-ஜி ஒதுக்கீடானது அரசின் கொள்கை முடிவில் ஒன்றாகும். இருப்பினும் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு சில சமூக பொறுப்பை நிறைவேற்ற வேண்டிய கடமையும் உள்ளது.
தாமதம் ஏன்?:
3-ஜி ஏல நடைமுறை கால தாமதமானதற்கு ரேடியோ அலை வரிசை கிடைக்காததும், இத்துறையில் எத்தனை நிறுவனங்களை அனுமதிக்கலாம் என்பதில் ஒருமித்த கருத்து எட்டப்படாததும் காரணமாகும்.
மேலும் கைவசம் உள்ள அலைக்கற்றை அளவு,இதில் ஒதுக்கீடு செய்ய வேண்டிய அளவு, நிர்ணயிக்க வேண்டிய தொகை போன்றவற்றை முடிவு செய்யவேண்டியிருந்ததன் காரணமாக ஏலம் தாமதமானது.
மேலும் அமைச்சர்கள் அடங்கிய அதிகாரமளிக்கப்பட்ட குழு கடந்த ஜூலை மாதம் ஏற்படுத்தப்பட்டது. அப்போது 3-ஜி ஏலம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்குழு பலமுறை கூடி விவாதித்தது. இறுதியில் 3 கட்டங்களாக 17 சேவை பிராந்தியங்களில் இதை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. இம்மாதம் 9-ம் தேதி ஏலம் தொடங்கியுள்ளது.
3-ஜி ஏலம் மூலம் ரூ. 35 ஆயிரம் கோடியை திரட்ட அரசு இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால் நிறுவனங்களின் அதிக ஆர்வம் காரணமாக ரூ.45 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதேநேரம் தற்போது 2-ஜி மற்றும் 3-ஜி தொடர்பாக பொதுமக்களிடையே குழப்பம் நிலவுவது உண்மைதான். விரைவில் இந்தக் குழப்பங்கள் நீங்கும் என்றார் அமைச்சர் ராசா.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications