சேலம் மத்திய சிறையில் மாறு வேடத்தில் வந்த நக்சலைட் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம் : சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதியை பார்க்க மாறுவேடத்தில் வந்த நக்சலைட் டை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து சிறைத்துறை இயக்குனர் கூடுதல் டி.ஜி.பி ஷியாம்சுந்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நக்சலைட் இயக்கத்தில் முன்பு தீவிரமாக செயல்பட்டவரும், ஆயுள் தண்டணை கைதியுமான ராதாகிருஷ்ணன் என்பவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவர் 24.4.1978 அன்று சிறையின் மதில் சுவர் மேல் ஏறி தப்பி சென்று விட்டார். இந்த வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டு ராதாகிருஷ்ணன் மீண்டும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு அவர் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சென்னை மத்திய சிறையிலிருந்து பரோலில் சென்ற அவர் மீண்டும் ஜெயிலுக்கு திரும்பாமல் தலைமறைவாகி விட்டார். அதன் பிறகு அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் அரசு பொது மன்னிப்பின்படி கடந்த 93 ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அரசு பொதுமன்னிப்பில் அவர் தவறுதலாக விடுதலை செய்யப்பட்டு விட்டார் என்று கண்டறியப்பட்டது.

இதனால் அவரது பொதுமன்னிப்பு விடுதலையை ரத்து செய்து விட்டு மீண்டும் அவரை கைது செய்ய அரசு உத்தரவிட்டது.

போலீசார் தேடி வந்த நிலையில் கைதி ராதாகிருஷ்ணன் மாறுவேடத்தில் பார்வையாளரைப் போல சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் கைதி கோபால் என்பவரை பார்கக வந்த போது கைது செய்யப்பட்டார்.

கைதி ராதாகிருஷ்ணனை மடக்கிப்பிடித்த சிறை அதிகாரி ராஜாமனோகரை பாராட்டி சிறைத்துறை சார்பில் ரூ 1000 ரொக்கப் பரிசு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+