மே 10ல் பிளஸ்-2 முடிவு, 20ம் தேதி எஸ்எஸ்எல்சி ரிசல்ட்
சென்னை: வரும் மே 10ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது. பத்தாம் வகுப்பு முடிவுகள் 20ம் தேதி வெளியாகலாம்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிவடைந்தது. 6,89,687 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து சென்னை கிண்டியில் உள்ள டேட்டா சென்டரில் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந் நிலையில் மருத்துவம், என்ஜினீயரிங் ஆகியவற்றில் சேருவதற்கான கவுன்சிலிங் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்தப் படிப்புகளில் சேருவதற்கு வசதியாக பிளஸ்-2 தேர்வு முடிவுகளையும் கடந்த ஆண்டுகளை விட இந்த வருடம் முன் கூட்டியே வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
இதனால் மே 10ம் தேதியே முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
20ம் தேதி எஸ்எஸ்எல்சி முடிவுகள்
அதேபோல 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.
இந்த விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவடைந்துவிட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8,56,966 மாணவ- மாணவிகள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications