மே 10ல் பிளஸ்-2 முடிவு, 20ம் தேதி எஸ்எஸ்எல்சி ரிசல்ட்
சென்னை: வரும் மே 10ம் தேதி பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது. பத்தாம் வகுப்பு முடிவுகள் 20ம் தேதி வெளியாகலாம்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி முடிவடைந்தது. 6,89,687 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினர்.
இந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து சென்னை கிண்டியில் உள்ள டேட்டா சென்டரில் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
இந் நிலையில் மருத்துவம், என்ஜினீயரிங் ஆகியவற்றில் சேருவதற்கான கவுன்சிலிங் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்த திட்டமிட்டு தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனால் இந்தப் படிப்புகளில் சேருவதற்கு வசதியாக பிளஸ்-2 தேர்வு முடிவுகளையும் கடந்த ஆண்டுகளை விட இந்த வருடம் முன் கூட்டியே வெளியிட தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.
இதனால் மே 10ம் தேதியே முடிவுகள் வெளியாகலாம் என்று தெரிகிறது.
20ம் தேதி எஸ்எஸ்எல்சி முடிவுகள்
அதேபோல 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 20ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளது.
இந்த விடைத்தாள் திருத்தும் பணியும் நிறைவடைந்துவிட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8,56,966 மாணவ- மாணவிகள் இந்தத் தேர்வை எழுதியுள்ளனர்.












Click it and Unblock the Notifications