16 வது சிறுமி கண்ணில் இருந்த மரத்துண்டை அகற்றி டாக்டர்கள் சாதனை
கோவை : ஊட்டியைச் சேர்ந்த பெண்ணின் கண் இமைப் பகுதியில் இருந்த மரத் துண்டை, அறுவை சிகிச்சை மூலம் கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகற்றி சாதனை படைத்துள்ளனர்.
ஊட்டி, தங்காடு, மன்னேரிமந்தனையை சேர்ந்தவர் பெரியசாமி. தேயிலை தோட்ட கூலித் தொழிலாளி. இவரது மகள் ரேவதி (16). வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்.
இவர், கடந்த 2 ம் தேதி, தேயிலை தோட்டப் பகுதியில் சென்ற போது வலிப்பு ஏற்பட்டு, அருகில் இருந்த தேயிலை செடிகளுக்குள் விழுந்தார்.
இதனால், அவரின் வலது கண் இமை பகுதிக்குள் அங்கிருந்த மரத்துண்டு பாய்ந்தது. அலறித் துடித்த ரேவதியை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் குழு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு மரத்துண்டை அகற்றினர்.
மிகவும் அபாயகரமான இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டு மரத்துண்டை அகற்றிய டாக்டர்கள் குழுவை, மருத்துவமனை டீன் (பொறுப்பு) டாக்டர் குமரன் பாராட்டினார்.












Click it and Unblock the Notifications