கொழும்பு இந்திப் பட விழாவை வேறு நாட்டுக்கு மாற்றக்கோரி போராட்டம்
மதுரை: கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவை வேறு நாட்டுக்கு மாற்றக் கோரி சென்னையில் தமிழர்களைக் காப்போம் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்பத் துறையினர் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம்நடைபெறுகிறது.
தமிழர் இனப்படுகொலை நடந்த இடத்தில் இன்னும் குறுதிசுவடுகள் கூட காயாத நிலையில், இந்தி திரையுலகினர் தமிழினப் படுகொலையை மறைத்து களியாட்டத்தில் மூழ்கிட திட்டமிடுகின்றனர் என்ற குற்றச்சாட்டுஎழுந்துள்ளது. மேலும் இந்த விழாவுக்கு அமிதாப் பச்சன் செல்லக் கூடாது என்று கோரி அவரது வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில்,விருது வழங்கும் விழாவின் இடத்தை கொழும்பில் இருந்து வேறு நாட்டுக்கு மாற்றக் கோரி தமிழர்களைக் காப்போம் இயக்கத்தின், தகவல் தொழில்நுட்பத்துறையினர் 8ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications