வசிரிஸ்தானில் தீவிரவாதிகளை ஒடுக்க பாக்.குக்கு அமெரிக்கா கண்டிப்பு
நியூயார்க்: வசிரிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள தீவிரவாதிகளை பாகிஸ்தான் முழுமையாக ஒடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம், அமெரிக்கா கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.
நியூயார்க் கார் குண்டு சம்பவத்தைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது கோபப் பார்வையைத் திருப்பியுள்ளது அமெரிக்கா.
நியூயார்க்கில் வைக்கப்பட்ட கார் குண்டு வெடித்திருந்தால் பாகிஸ்தான் கடும் விளைவுகளைச் சந்தித்திருக்கும் என்று வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.
இந்த நிலையில் வசிரிஸ்தான் பிராந்திய தீவிரவாதிகளை முழுமையாக ஒழிக்க வேண்டும் என பாகிஸ்தானிடம் கண்டிப்புடன் கூறியுள்ளது அமெரிக்கா.
வசிரிஸ்தான் பகுதியில்தான் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சியைப் பெற்றதாக நியூயார்க் டைம்ஸ் சதுக்கப் பகுதியில்கார் குண்டு வைத்துப் பிடிபட்ட பாகிஸ்தானிய அமெரிக்கரான பைசல்சஷாத் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றுபாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் அஷ்பாக் பர்வேஸ் கயானியை, அமெரிக்காவின் ஆப்கானிஸ்தானுக்கான் தளபதி மெக்கிறிஸ்டல் வசிரிஸ்தான் குறித்து வலியுறுத்தினார்.
வடக்கு வசிரிஸ்தானில் பாகிஸ்தானியப் படைகள் முழு வேகத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என கயானியிடம் மெக்கிறிஸ்டல் வலியுறுத்திக் கூறினார்.












Click it and Unblock the Notifications