பிளஸ்டூ தேர்வு முடிவு 14ம் தேதி வெளியாகலாம்
சென்னை: பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியிடத் தயார் நிலையில் உள்ளன. இருப்பினும் அரசின் அனுமதிக்காக தேர்வுகள் இயக்குநரகம் காத்திருக்கிறது. அனேகமாக 14ம் தேதி முடிவு வெளியாகலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 22-ந்தேதி வரை பிளஸ்-2 தேர்வு நடந்தது. இந்த தேர்வை ஏழரை லட்சம் மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.
தேர்வு முடிந்ததும் 44 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது. அதன் பின்னர் மதிப்பெண்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன. பின்னர் மதிப்பெண் பட்டியல்தயாரிக்கும் பணிநடைபெற்றது.
இதையடுத்து தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மாணவ, மாணவியர் உள்ளனர். என்ஜீனியரிங் படிப்புக்கான விண்ணப்ப்பங்கள் கடந்த 3ம் தேதி முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்புக்கு 17ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் தொடங்குகிறத.
கடந்த ஆண்டு மே 14ம் தேதி தேர்வு முடிவு வெளியானது. இந்த ஆண்டு முன்கூட்டியே அதாவது மே10 அல்லது 12ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் இதுவரை தேதி அறிவிக்கப்படவில்லை. முடிவுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் தேர்வுகள் இயக்குநரக வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது. அனேகமாக மே 14ம் தேதி தேர்வு முடிவு வெளியாகலாம் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications