கடும் வெயிலுக்கு ஆந்திராவில் 22 பேர் பலி
Subscribe to Oneindia Tamil

ஆந்திராவில் கடும் வெயில் கொளுத்தி வருகிறது. சன் ஸ்டிரோக் ஏற்பட்டு இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்.
சராசரியாக அங்கு 40 முதல் 46 டிகிரி செல்சியஸ் வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. கடும் வெயில்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை சன் ஸ்டிரோக் காரணமாக 22 பேர் பலியாகியுள்ளதாக அரசுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகபூப்நகர் மாவட்டத்தில் 9 பேரும், மேடக், நிஜாமாபாத், கரீம்நகர் மாவட்டங்களில் தலா 4 பேரும் இறந்துள்ளனர். ஹைதராபாத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications