For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை போரில் 2.6 லட்​சம் தமிழர் வீடு​கள் சேதம்

By Chakra
Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்​கை​யில் தமிழர் பகுதிகளில் நடந்த இறு​திக் கட்​டப் போரில் வடக்​குப் பகு​தி​யில் தமிழர்களின்​ 2.6 லட்​சம் வீடு​கள் சேதம் அடைந்​த​தாக செஞ்​சி​லு​வைச் சங்​கம் கூறி​யுள்​ளது.​

இந்த வீடு​கள் அனைத்​துமே யாரும் வசிக்க முடி​யாத அள​வுக்கு உருக்​கு​லைந்​து​விட்​டன.​ இவற்றை
சீர​மைத்​தால்​தான் குடி​யி​ருக்க இய​லும் என்​றும் செஞ்​சி​லு​வைச் சங்​கம் தெரி​வித்​துள்​ளது.​

ஆனால், இந்த வீடு​களை சீர​மைக்​கா​மலேயே அப்​ப​கு​தி​யில் தமி​ழர்​களை மீண்​டும் குடி​ய​மர்த்த இலங்கை அரசு தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

வட பகு​தி​யில் தாற்​கா​லிக முகாம்​க​ளில் தங்​கி​யி​ருந்த தமி​ழர்​களில் இது​வரை 2.07 லட்​சம் பேர் அவர்​க​ளது சொந்த ஊர்​க​ளுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ள​னர்.​
வவு​னியா,​​ மன்​னார்,​​ யாழ்ப்​பா​ணம்,​ ஆகிய மாவட்​டங்​க​ளில் உள்ள முகாம்​க​ளில் இன்​னும் 80,246 பேர் தங்​கி​யுள்​ள​னர்.​

இவர்​க​ளை​யும் அவர்​க​ளது சொந்த ஊர்​க​ளுக்கு திருப்பி அனுப்ப இலங்கை அரசு நட​வ​டிக்கை எடுத்து வரு​கி​றது.​ அடுத்த 6 மாதத்​துக்​குள் இவர்​கள் அனை​வ​ரும் அவர்​க​ளது சொந்த ஊர்​க​ளில் குடி​ய​மர்த்​தப்​ப​டு​வார்​கள் என்று தெரிகிறது. ஆனால், அவர்களது வீடுகளை சீரமைத்துத் தர அரசு தயாராக இல்லை.

வட பகு​திகளில் கண்​ணி​வெ​டி​களை மட்டும் அகற்​றிவிட்டு அங்கு தமி​ழர்​களை மறு​கு​டி​ய​மர்த்​தி வருகிறது அரசு.

தமி​ழர் பகு​தி​யில் ராணு​வம் வாபஸ் இல்லை:

இந் நிலையில் தமி​ழர்​கள் அதி​கம் வசிக்​கும் வடக்கு மற்​றும் கிழக்​குப் பகு​தி​யில் ராணு​வத்தை வாபஸ் பெறவோ படைகளின் எண்ணிக்கையை குறைக்கவோ முடி​யாது என்று பாது​காப்​புத் துறை செய​லாளரான கோத்​த​பய ராஜ​பக்சே கூறியுள்ளார்.

சண்டே டைம்ஸ் பத்​தி​ரி​கைக்கு அவர் அளித்த பேட்டியில்,

வ​ட,​​ கிழக்​கில் ராணு​வத்தை குறைக்க வேண்​டும் என்று கூறு​வது முட்​டாள்​த​னம்.​ ராணு​வத்​தைக் குறைத்​தால் விடு​த​லைப் புலி​கள் போன்ற பயங்​க​ர​வாத அமைப்​பு​கள் மீண்​டும் தலை​தூக்கும்.​

முன்பு வன்னி வனப்​ ப​கு​தி​க​ளில் மறைந்திருந்து கொரில்லா தாக்​கு​தல்​களை நடத்தி புலி​கள் ஆதிக்​கம் செலுத்தி வந்​த​னர்.​ இப்​போது அப்​ப​கு​தி​யில் ராணு​வத்தை குவித்​துள்​ள​தன் மூலம் அவர்​களை தலை​தூக்க முடி​யா​மல் செய்​துள்​ளோம்.​

வடக்கு மற்​றும் கிழக்​கில் அர​சி​யல் சீர்​தி​ருத்​தங்​களை மேற்​கொள்​வது அவ​சி​யம் தான்.​ ஆனால் இப்​போ​தைய தேவை வளர்ச்​சிப் பணி​களை மேற்​கொள்​வ​தானே தவிர அர​சி​யல் அதி​கா​ரப் பகிர்வு அல்ல என்று கூறியுள்ளார்.

ஜூன் 8ல் ராஜ​பக்சே இந்​தியா வருகை:

இந் நிலையில் இலங்கை அதி​பர் ராஜ​பக்சே வரும் ஜூன் 8ம் தேதி இந்​தி​யா​வில் சுற்​றுப் பய​ணம் மேற்​கொள்ள உள்​ளார்.​

இது குறித்து அந்​நாட்டு வெளி​யு​றவு அமைச்​சர் ஜி.எல்.​ பெரிஸ் கூறுகையில்,

ஜன​வரி மாதம் இலங்​கை​யில் நடை​பெற்ற பொதுத் தேர்த​லில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறை​யாக ராஜபக்சே இந்​தி​யா செல்கிறார்.

போரி​னால் பாதிக்​கப்​பட்ட இலங்​கையை சீர​மைக்க இந்​தியா ரூ.​ 500 கோடி நிதியுதவி அளித்​துள்​ளது என்றார்​.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X